கரூர், மே 29 -மறைந்த தோழர் விஜயராகவனுக்கு சிஐடியு மற்றும்தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, சிஐடியு சங்க கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2003-ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு எதிராக அன்றைய அதிமுக அரசு கடுமையான வன்முறையை கட்டவிழ்த்தபோது, தமிழகத்தில் முதலாவதாக கைது செய்யப்பட்டவர் தோழர் விஜயராகவன். ஆக்கிரமிப்பில் இருந்த கரூர் மாவட்ட அரசு ஊழியர் சங்க அலுவலகத்தை மீட்டுஅதனை அரசு ஊழியர்களின்அன்றாட செயல்பாட்டிற்காக மாற்றியமைத்ததில் பெரும்பங்கு வகித்தவர். கரூர் அரசுதலைமை மருத்துவமனையில் நுண்கதிர் பிரிவில் பணியாற்றியபோது நோயாளிகளிடம் அவர் பரிவுடன் நடந்துகொண்டவர். அவரது மறைவுக்கு சிஐடியு கரூர் மாவட்டக்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், துயரத்தில் உள்ள அவரது குடும்பத்திற்கும் தோழர்களுக்கும் சிஐடியு கரூர் மாவட்டக் குழு வருத்தத்தை உரித்தாக்கிக் கொள்கிறது என தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் இரங்கல்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் முன் னாள் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.விஜயராகவனின் மறைவிற்கு தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட, வட்டக் கிளைகள் மற்றும் துறை வாரி சங்கங்களின் சார்பிலும், மத்திய-மாநில பொதுத்துறை மற் றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண் பர்களுக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தனது ஆழ்ந்த மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்த அன்னாரது உடலுக்கு, சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.சுப்ரமணியன், மாவட்டத் தலைவர் எம்.மகாவிஷ்ணன், மாவட்டச் செயலாளர்கே.சக்திவேல், மாவட்டப் பொருளாளர் பொன்.ஜெயராம், முன்னாள் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் என தெரிவித்துள்ளார்.