tamilnadu

img

திருச்சியில் தோழர் சரவணன் புகழஞ்சலி கூட்டம்...

திருச்சிராப்பள்ளி:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர்களில் ஒருவரும், திருச்சி ஆர்டினன்ஸ் பேக்டரி எம்ப்ளாயிஸ் யூனியன் தலைவராகவும், ஜேசிஎம்இரண்டாம் நிலை உறுப்பினராகவும் செயல்பட்டுமறைந்த தோழர் சரவணன் புகழஞ்சலி கூட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் மற்றும் ஆர்டினன்ஸ் பேக்டரி எம்ப்ளா யீஸ் யூனியன் திருச்சி மாவட்ட குழு சார்பில் திங்களன்று மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டல் செவனாவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமுஎகச மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா தலைமை வகித்தார். அஞ்சலி உரையில் திருச்சி ஆர்டினன்ஸ் பேக்டரிஎம்ப்ளாயிஸ் யூனியன் தலைவர் ஜெயபால், வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், எச்எபியு இயு பொதுச் செயலாளர் இரணியன், தமுஎகச மாநில துணை செயலாளர் வெண்புறா, பெல் சிஐடியு துணைத் தலைவர் அருணன், கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைச் செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். 

வானம் அமைப்பு குமாரவேல், களம் அமைப்பு சேதுராமன், தமுஎகச மாநில குழு உறுப்பினர் இளங்குமரன், சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர் புதுகை பூபாலம் பிரகதீஸ்வரன் ஆகியோர் புகழுரையாற்றினர்.முன்னதாக தமுஎகச மாவட்ட செயலாளர் ரங்கராஜன் வரவேற்றார். தமுஎகச மாவட்டபொருளாளர் காளிராஜ் நன்றி கூறினார். முன்னதாக தோழர் சரவணன் உருவப்படத்திற்கு நீண்ட வரிசையில் நின்று சரவணன் மனைவி, மகன் உள்பட அனைவரும் மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர்.

;