திருவாரூர், ஜூன் 4-திருவாரூர் ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் லிகாய் கிளைச் செயலாளர் எஸ்.செந்தில்குமார் தந்தை எஸ்.சீனிவாசன்(93) திருவாரூர் புதுத் தெருவில் எல்.ஐ.சி,அலுவலகம் எதிரே அமைந்துள்ள சி.வி.எஸ் நகரிலுள்ளஅவரின் இல்லத்தில் வசித்தார். இவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். இவர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊர்நல அலுவலர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மங்களம் என்ற மனைவியும், செந்தில்குமார் என்ற மகனும், ராஜலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.அன்னாரின் மறைவு செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழுஉறுப்பினர் ஜி.பழனிவேல், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் எம்.முருகையன், தலைவர் இரா.மாலதி, டி.என்.சி.எஸ்.சி. மண்டல செயலாளர் ஆர்.மோகன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் வைத்தியநாதன், மின் ஊழியர் சங்கத்தின் மத்திய அமைப்புச் செயலாளர் கே.ராஜேந்திரன் மற்றும் ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்புண்ணியமூர்த்தி, கிளைத் தலைவர் ஆர்.தெட்சிணாமூர்த்தி, லிகாய் சங்கத்தின் கோட்ட செயலாளர் ஆர்.கருணாநிதி, ஓஎன்ஜிசி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோ.வேல்ரத்தினம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் மற்றும்பல்வேறு அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், வெகுஜன அரங்கத்தின் தலைவர்கள், தோழர்கள் கலந்து கொண்டு மறைந்த தோழர் எஸ்.சீனிவாசன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் இறுதி ஊர்வலம் புதன்கிழமை காலை 8 மணி அளவில் நடைபெறவுள்ளது.