tamilnadu

img

தோழர் லீலாவதி நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சிராப்பள்ளி, ஏப்.23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் களப்போராளியும், மதுரை மாமன்ற முன்னாள் உறுப்பினருமான மறைந்த தோழர் தியாகி லீலாவதி நினைவு தினம் செவ்வாய் அன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் கடைப் பிடிக்கப்பட்டது. தோழர் லீலாவதியின் உருவப்படத்திற்கு மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், பழநிசாமி, சுப்பு, வெற்றிச்செல்வன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கபுறநகர் மாவட்டத் தலைவர் லிங்கராணி, சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் சம்பத்,புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் ரஜினிகாந்த், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் பன்னீர்செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, ரபீக், அலுவலக உதவியாளர் ராணி மற்றும் கட்சியினர்மாலை அணிவித்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.இதே போன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மணப்பாறை கமிட்டி சார்பாக மதுரை மாமன்ற கவுன்சிலர் தியாகி லீலாவதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வாலிபர்சங்கத்தின் புறநகர் மாவட்டத் தலைவர் பாலு, வட்டத் தலைவர் இளையராஜா, வட்டப்பொருளாளர் இளையராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் சங்கர்ராஜ், வட்ட துணைச்செயலாளர் விஜய், வட்ட துணை செயலாளர் முபாரக், சிறுபான்மை மக்கள் நலக்குழு,மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜஹான், மாற்றுத்திறனாளி சங்கம் மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், தீண்டாமை ஒழிப்புமுன்னணி  வட்டத்தலைவர் தங்கராஜ், வாலிபர் சங்க உறுப்பினர் பிரவீன் குமார் மற்றும் மூத்த தோழர்கள் துளசிவேல், இளமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;