tamilnadu

img

தோழர் கதிரேசன் காலமானார்

திருச்சிராப்பள்ளி, நவ.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட காட்டூர் பகுதிக்குழு உறுப்பி னராகவும், தமுஎகசவின் மாவட்டக் குழு உறுப்பினராகவும், மக்கள் பிரச்சனைகளுக் காக குரல் கொடுத்து போராடி வந்த தோழர் கதிரேசன் கடந்த சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று காலமானார்.  காட்டூர் விக்னேஷ் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அன்னாரது உடல், கட்சியி னர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு காட்டூர் பகுதிக்குழு செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ராஜா, மாநகர் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சி.பாண்டியன், ரேணுகா, லெனின், காட்டூர் பகு திக்குழு உறுப்பினர் பத்மநாபன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் செந்தமிழ்செல்வன், சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர்கள் சுப்ரமணியன், சக்திவேல் ஆகி யோர் பேசினர். அன்னாரது உடலுக்கு, மார்க் சிஸ்ட் கட்சியினர், வெகுஜன அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.