tamilnadu

img

தோழர்.இரா.புண்ணியமூர்த்தி பணி நிறைவு பாராட்டு விழா

தஞ்சாவூர், ஜூன் 30- ஆயுள் காப்பீட்டுக் கழக தென் மண்டல துணைத் தலைவரும், கோட்டச் சங்கத் தலைவருமான இரா.புண்ணியமூர்த்தி பணி நிறைவு பெற்றார். இதையொட்டி தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. காப்பீட்டுக் கழக தஞ்சைக் கோட்ட பொதுச் செயலாளர் எஸ்.செல்வராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தஞ்சை கோட்ட முன்னாள் பொறுப்பாளர்கள் என்.சீனிவாசன், கே.லட்சுமணன், எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.இயேசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் வி.சேதுராமன் வரவேற்றார்.காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் அமானுல்லா கான், பொதுச் செயலாளர் வி.ரமேஷ், தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், காப்பீட்டு ஊழியர் சங்க நிர்வாகிகள் எம்.கிரிஜா, எம்.குன்னி கிருஷ்ணன், கே.சுவாமிநாதன், டி.செந்தில்குமார், ஜி.ஆனந்த், வி.சுவாமிநாதன், என்.அருண்ராஜ், ஏ.அலெக்சாண்டர் முடியப்பா, என்.ராஜா, சி.டி.சொக்கலிங்கம், கே.அன்பழகன் உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.

இரா.புண்ணியமூர்த்தி ஏற்புரையாற்றினார். நிறைவாக கோட்டப் பொருளாளர் எம்.ரவிசங்கர் நன்றி கூறினார்.  நிகழ்ச்சியில் இரா.புண்ணியமூர்த்தி சார்பில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், இன்சூரன்ஸ் ஊழியர் மாத இதழ், தீக்கதிர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என தலா 10 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது. மேலும் விழாவையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா வெளியிட, தீக்கதிர் முன்னாள் முதன்மைப் பொதுமேலாளர் என்.சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.  இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மூத்த தலைவர் மதுரை இ.எம்.ஜோசப் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்டத்தின் புனரமைக்கப்பட்ட  அலுவலக கட்டிடத்தை அகில இந்திய தலைவர் அமானுல்லாகான் திறந்து வைத்தார். 

;