tamilnadu

img

தோழர் ஆழி அரங்கராஜன் படத்திறப்பு

தஞ்சாவூர் ஜூலை.14- தொழிற்சங்கவாதி, அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கம் மற்றும் ஆசிரியர் அரங்கம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பணியாற்றியவரும், சிறந்த நாடகக் கலைஞராகவும் திகழ்ந்த தோழர் ஆழி அரங்கராஜன் கடந்த ஜூலை 2-ஆம் தேதி காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சை முத்து மகாலில் ஞாயிற்றுக்கிழமை காவேரி கலைக்குழு நிறுவனர் மா.வீ.முத்து தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், தோழர் ஆழி அரங்கராஜனின் உருவப் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தி பேசினார். சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சி.பழனிவேலு, பி.செந்தில்குமார், கே.அருளரசன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.சரவணன் மற்றும் எல்ஐசி ஜேசுதாஸ், டி.சுத்தானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.