tamilnadu

img

சிஐடியு அமைப்பு தின பேரவை

தஞ்சாவூர் மே.31-தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் சிஐடியு அமைப்பு தினம் மற்றும் பொன் விழா ஆண்டு சிறப்பு பேரவைக்கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர்சி.ஜெயபால் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், நிர்வாகிகள் கந்தசாமி, எம்.ஆர்.செந்தில்குமார், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க நிர்வாகிகள் மோரீஸ்அண்ணாதுரை, குலோத்துங்கன், மீன்பிடித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.குத்புதீன், மாவட்ட துணைத் தலைவர் பி.பெரியண்ணன், ஏரிப்புறக்கரை சுதாகர், கே.கிருஷ்ணமூர்த்தி, வி.தொ.ச ஒன்றியத் தலைவர் தமிழ்செல்வன், கே.செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்ட சிறப்பு பேரவை சிஐடியு மாவட்டத் தலைவர்து.கோவிந்தராஜ்தலைமையில் நடைபெற்றது. மாநில துணைைத் தலைவர்எஸ்.எஸ்.சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் சிறப்புரையாற்றினார். மாவட்டநிர்வாகிகள் இ.டி.எஸ்.மூர்த்தி,க.வீரையன்,பி.என்.பேர்நீதிஆழ்வார்எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்ட60 தோழர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிஐடியு அமைப்பு தொடக்கம், அதன் வீரியம் மிக்க செயல்பாடுகள், நடத்திய போராட்டங்கள் குறித்தும், மேலும் வலுவாக கட்டமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.