tamilnadu

img

சிஐடியு தலைவர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர், மே 23-ஸ்ரீபெரும்புதூரில் பன்னாட்டு நிறுவனம் ஷோவல் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து போராடிய சிஐடியு சங்க தொழிலாளர் 150 பேர் மற்றும் சிஐடியு மாநில நிர்வாகிகள்   முத்துக்குமார், கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், சிறையில் உள்ள சிஐடியு மாநில செயலாளர் இ.முத்து  குமாரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், சம்பந்தப்பட்ட  தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண  வலியுறுத்தியும் சிஐடியு சங்க மாவட்டக்குழு சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சி.முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, சிஐடியு சங்க மாவட்ட நிர்வாகிகள் சாம்பசிவன்,  கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, காதர்பாட்ஷா ராஜாமுகமது, ஹோச்சுமின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

நாகை

இதே போல் சிஐடியு நாகை மாவட்டக்குழு சார்பில் அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க துணைப் பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி உரையாற்றினார். தோழமைச் சங்க நிர்வாகிகள் சு.சிவகுமார், சு.மணி, சொ.கிருஷ்ணமூர்த்தி, எம்.பெரியசாமி, எஸ்.கணபதி, எம்.பி.குணசேகரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.