அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி முழுநேர கிளை நூலகத்தில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2018-19-ன் கீழ் ரூ 2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நூலக சுற்றுச்சுவரை சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி திறந்து வைத்தார். நிகழ்வில் நகராட்சி ஆனணயர் த.முத்துகணேஷ் வர்த்தக சங்கத்தின் தலைவர் பா.வரதராஜன், வாசகர் வட்டச் செயலாளர் இர.அப்துல் ரஹ்மான், வாசகர் வட்டத் தலைவர் சி.திருநாவுக்கரசு, நூலகர்கள் எம்.செந்தில்நாதன், ஆ.கார்த்திகேயன், ஒப்பந்தக்காரர் சாத்தகுடி ராசு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஐி.மண்டலமுத்து, கலிபுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.