tamilnadu

img

குழந்தைகள் தின விழா

திருச்சிராப்பள்ளி, நவ.15- திருச்சியில் அறம் மக்கள் நல சங்கம் சார்பில் வியாழனன்று அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. மன்னார்புரம் தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கேத்தரின் தலைமையில், அறம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் ராஜா வழிகாட்டுதலின்படி, பொதுச் செயலாளர் ரமேஷ்குமார் மாணவர்களுக்கு ஆங்கிலம் - தமிழ் டிக்ஸ்னரி, நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கி னார். மேலும் அப்பள்ளிக்கு தேவையான உபகரணங்க ளையும் வழங்கினார். இதே போன்று செங்குளம் காலனி மாநகராட்சி துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் சரஸ்வதி தலைமையிலும், எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமையிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டு, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதி களையும் செய்து கொடுத்தனர். நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பிரபாகரன், தங்கதுரை, மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;