tamilnadu

img

சிறுவன் சுஜித் : ஓ. பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார்

திருச்சி:
பயன்படுத்தப்படாத  ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித்தை மீட்க நடைபெற்றுவரும் குழிதோண்டும் பணிகளை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஞாயிறு நள்ளிரவில் பார்வையிட்டார்.தொடர்ந்து குழந்தை சுஜித்தின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களி டம் பேசிய அவர், தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆள்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

;