tamilnadu

சிதம்பரம்- சீர்காழிக்கு பேருந்துகள் இயக்க கோரிக்கை

சீர்காழி, ஏப்.16-சிதம்பரத்திலிருந்து கொள்ளிடம் வழியே சீர்காழிக்கு டவுன் பேருந்து விட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சிதம்பரத்திலிருந்து சீர்காழிக்கு, கொள்ளிடம், தைக்கால், சாமியம், கண்ணாங்குளம், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சீர்காழிக்கு செல்ல கடந்த 5 வருடங்களுக்கு முன்பு 3 அரசு டவுன் பேருந்துகள் இயங்கின. ஆனால் இந்த பேருந்துகள் இயக்கம் திடீரென நிறுத்தப்பட்டன. பெரும்பாலான பேருந்துகள், கொள்ளிடத்திலிருந்து சீர்காழிக்கு செல்லும் இடைபட்ட பகுதியில் உள்ள நிறுத்தங்களில் நில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன. இதனால்100 கணக்கான கிராமங்களைச் சேர்ந்தவர்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அவதிப்படுகின்றனர். அரசு விரைவு பேருந்துகள் சிதம்பரம் கொள்ளிடம் அதனையடுத்து சீர்காழியில் தான் நின்று செல்கின்றன. தனியார் பஸ்களும் பெரும்பாலானநிறுத்தங்களில் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி சிதம்பரத்திலிருந்து கொள்ளிடம் வழியாக சீர்காழிக்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;