tamilnadu

img

சிபிஎம் முன்னிலையில் சாதி மறுப்பு திருமணம்

பெரம்பலூர், ஜூன் 15- பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு முல்லை நகரை சேர்ந்தவர் சுகுமாரன்- சுலோசனா. இவர்களது மகன் ஜெகநாதன்(26). பெரம்பலூர் சங்கு அருகில் கேஸ் வெல்டிங் தொழிலாளியான ஆலத்தூர் வட்டம் புதுவிராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து செல்வமனி ஆகியோரது மகள் மாலினி(19). பெரம்பலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வருகிறார். இருவேறு சமூகத்தை சேர்ந்த ஜெகநாதன்- மாலினி இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி வட்டக்குழு உறுப்பினரும் ஜெகநாதனின் உறவினருமாகிய சீனிவாசனிடம் தெரிவித்தனர். அதனைதொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை தலைமையில் வெள்ளியன்று பெரம்பலூர் துறைமங்கலத்தில் ஜெகநாதன் மாலினி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணமக்களை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அழகர்சாமி, மாதர்சங்க நிர்வாகிகள் எ.கலையரசி, வஸந்தா, கட்சி பி.முத்துசாமி, ஆர்.முருகேசன், பி.கிருஷ்ணசாமி மற்றும் மணமகனின் பெற்றோர் ஆகியோர் வாழ்த்தினர்.

;