tamilnadu

img

புற்றுநோய் சிகிச்சை மையம் தொடக்கம்

தஞ்சாவூர் ஜூன்.8- கும்பகோணத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பகல் நேர புற்றுநோய் மருத்துவ சிகிச்சை மையம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் அ.காந்தி சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட குடும்ப கட்டுப்பாட்டு துறை இணை இயக்குனர் மலர்விழி முன்னிலை வகித்தார். நிலைய மருத்துவ அலுவலர் பிரபாகரன் வரவேற்றார். புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

;