குளித்தலை, ஜூன் 22 - கரூர் மாவட்டம் குளித்தலை - மணப்பாறை மெயின் ரோட்டில் உள்ள வை.புதூர் இரட்டை வாய்க்கால் பாலத்தில், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலம் அகலப்படுத்தப்பட்டது. ஆனால், மற்றொரு பாலம் பலப்படுத்தாமல் கிடக்கிறது. இப்பாலம் வழியாக மணப்பாறை, மதுரை, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. பொதுமக்கள், இந்த பாலத்தை கடக்கும் போது அச்சத்துடனே செல்கின்றனர். பாலத்தை பலப்படுத்தாதது, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் நிறைவேறாத கோரிக்கையாகவே உள்ளது. தமிழக அரசும் நெடுஞ்சாலைத் துறையினரும் விரைவில் மற்றொரு பாலத்தை அகலப்படுத்தி விபத்துகளை தடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.