tamilnadu

img

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து பிரச்சாரம்

தஞ்சாவூர், நவ.22- மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, சிஐடியு சார்பில், மூன்றாம் நாள் பிரச்சார பயணம் அய்யம்பேட்டை மின்வாரிய அலுவலகத்திலிருந்து புறப்பட்டு கணபதி அக்ரகாரம், வழுத்தூர், பாபநாசம், கபிஸ்தலம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டச் செயலாளர் பி. காணிக்கைராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன் கொடியேற்றி வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ பிரச்சாரப் பயணத்தை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ், கோட்டத் தலைவர்கள் மணிவண்ணன், பி.ராதா, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கும்பகோணம் கோட்டச் செயலாளர் கணேசன் மற்றும் விவசாய சங்கம் உமாபதி உள்பட திரளாக பங்கேற்றனர்.