திருத்துறைப்பூண்டி, ஜூன் 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றி யம் சார்பில் விளை நிலங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்று வலியுறுத்தியும், அதன் விளைவுகள் குறித்தும் வெள்ளியன்று காலை இருசக்கர வாகன பிரச்சாரப் பயணம் தோப்படித்தெருவில் துவங்கப்பட்டது. இந்தப் பயணத்தை, துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு பேசினார். பாமணி, கொக்ககாலடி, மேலகொருக்கை, கொருக்கை உள்ளிட்ட பகுதிகள் வழியாக மாலை 5 மணிக்கு நெடும்பலத்தில் பிரச்சாரப் பயணம் நிறைவு பெற்றது. ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.என்.தங்கராசு, ஆர்.வேதையன், டி.எஸ்.மணியன், ஆர்.மதியழகன், வி.ரவி, என்.வேதையன், ஏ.கே.வேலவன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் 50 வாகனத்தில் கலந்து கொண்டனர்.