tamilnadu

img

பாதியிலேயே நிற்கும் நீலகண்டபுரம் ரயில்வே கேட் கீழ் பாலப் பணி

தஞ்சாவூர், நவ.15- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகர் நீலகண்டபுரம் ரயில்வே கேட் எல்.சி எண்:121 கீழ்பாலம் கட்டும் பணி பாதியி லேயே கைவிட்டதைக் கண்டித்து வரும் நவ.20 ஆம் தேதி நீல கண்டபுரம் ரயில்வே கேட் அருகில் ரயில் மறியல் மற்றும் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என நீலகண்டபுரம் ரயில்வே கேட் உபயோ கிப்பாளர் குழு அறிவித்துள்ளது.  இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த வழக்குரைஞர் மோகன் கூறுகையில், “தென்னக ரயில்வே நீலகண்டபுரம் ரயில்வே கீழ்பாலப் பணியை முழுவதுமாக முடிக்காமல், பாதியிலேயே நிறுத்தி விட்டனர். தற்போது பெய்து வரும் பருவமழை கார ணமாக பாலத்தின் கீழ் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்க்கு ஆளாகி தவித்து வருகிறோம்.  குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இவ்வழி யாக பயணிப்போர், இப்பகுதி மக்கள் 2 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக் கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான நீலகண்டபுரம் பகுதி மக்கள் மட்டுமின்றி, இவ்வழியாக பயணிக்கும் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கடும் துய ரத்தை அனுபவித்து வருகிறோம். இதனால் வேறு வழி யின்றி போராடும் நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ள னர்.  இதுகுறித்து ரயில்வே துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.