tamilnadu

பொன்னமராவதி மற்றும் திருத்துறைப்பூண்டி முக்கிய செய்திகள்

செவலூர் கிராமத்தில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்

மருத்துவமனையில் அனுமதி

பொன்னமராவதி, ஜூன் 11- பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 5 இளைஞர்களை தாக்கிய மற்றொரு சமூகத்தை சேர்ந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவ லர்கள் விசாரணை செய்து வருகின்றனர். தாக்கப்பட்ட தனுஷ், சூர்யக்குமார், சோமேஷ், சந்தோஷ், மலையப்பன் உள்ளிட்ட இளைஞர்களுக்கு பொன்னமராவதி வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சைக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 8-ஆம் தேதி செவலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கையில் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டதாக தலைமை ஆசிரி யரை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.  போராட்டத்தின் விளைவாக அந்த தலைமை ஆசிரி யரும், அவரது கணவரின் தூண்டுதலின் பேரில் செவலூரில் எங்கள் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ரோட்டில் நடந்து செல்லும் போது பிற சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் எங்கள் சமூகத்து இளைஞர்களை இழிவாக பேசி தாக்கி அடித்துள்ள னர் என பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த மோதல் சம்பவம் குறித்து டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டு மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் செவலூர் விளக்கு முதல் செவலூர் கிராமம் வரை ஐம்பதுக்கும் மேற் பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

அறிவிக்கப்படாத தொடர்  மின்வெட்டு நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி நகர செயலாளர் ரகுராமன், மாவட்ட ஆட்சி யருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், கோடையில் மின் தேவை அதிகம் ஏற்படுகிறது. மின்மிகை மாநிலமாக தமி ழகம் திகழ்வதாக அரசு அறிவித்துள்ள நிலையில் தமி ழகத்தின் பல பகுதிகள் மற்றும் குறிப்பாக திருத்துறைப்பூண்டி நகர் பகுதிகளில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் மின்வெட்டு ஏற்படுகிறது.  தினமும் பல இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்வெட்டை நிர்வாகம் அமல்படுத்தி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகாரை கண்டு கொள்ளாமல் பராமரிப்பு என்ற பெயரில் திசை திருப்பப்பட்ட தகவல்கள் தரப்படுகிறது. மின்தடை குறித்து முன்கூட்டியே குறுந்தகவல்களும் வருவதில்லை. ஏற்கனவே ஜி.எஸ்.டி போன்ற காரணங்களால் நகர்புற சிறுதொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில் மேலும் இதுபோன்ற அறி விக்கப்படாத மின் தடை காரணமாக வணிக நிறுவனங்களும் அதை சார்ந்த நுகர்வோரும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி யுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வேலைகளை திட்டமிட்டபடி செய்ய முடியாமலும், வெயில் கொடுமையை சமாளிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிக்கூடங்கள் திறக்கப் பட்டுள்ள நிலையில் மாணவ மாணவிகள் கல்வி பாதிக்கப் படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மின் தடை காரணமாக குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மின் தடையை சீர மைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.