tamilnadu

img

திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

கீரமங்கலம், நவ.8- திருவள்ளுவர் சிலையை அவ மதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் திரு வள்ளுவர் மன்றத்தினர் வெள்ளிக் கிழமை கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளை யார்பட்டி கிராமத்தினரால் அமை க்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை கடந்தசில நாட்களுக்கு முன்பமர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். இச்சம்பவம் தமிழ் நாடு முழுவதும் பரபரப்பை ஏற் படுத்தியது. இந்துமக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் திரு வள்ளுவர் சிலைக்கு காவிதுண்டு, ருத்திராட்சமாலைஅணிவித்து திருநீரு, சந்தனம்,குங்குமம் வைத்து தீபாரதனை காட்டி குறிப்பிட்ட மதத்தின் சாயத்தை  பூசியதால் தமிழகத்தின் பலபகுதி களிலும் கொந்தளிப்புஏற்பட்டது. இந்நிலையில்,திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்த வர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவலியுறுத்தி கொத்தமங்கலம் சிதம்பர விடுதியில் 60 ஆண்டுக ளுக்கு மேலாக இயங்கிவரும் திருவள்ளுவர் மன்றத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.