கடலூர், ஜூன் 30 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கடலூரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.விக்டர்ஜெயசீலன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைத் தலைவர் உதயேந்திரன் வர வேற்றார். புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் மக்களையும் கல்வியையும் பாதிக்கக்கூடிய அம்சங்கள்குறித்து எழுத்தா ளர் ஆயிஷா நடராஜன் பேசினார். புதிய கல்விக் கொள்கை திட்ட கருத்துக்களின் மீது பார்வையாளர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களின் கேள்விகளுக்கும் ஆயிஷா நடராஜன் விளக்கம் அளித்தார். இந்நிகழ்வில், 11 கல்வி யாளர்களின் கட்டுரைகள் தொகுப்பு ‘இந்தியக் கல்வியின் இருண்ட காலம்’ என்ற நூலை ஆயிஷா நடரா ஜன் வெளியிட குடி யிருப்போர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.மருதவாணன் பெற்றுக்கொண்டார். தமுகஎச மாவட்டச் செயலாளர் பால்கி, ஆசிரியர் சங்கத்தின் தெரசா கேத்தரின், பாரதி புத்தகால யம் நாகராஜன், மாண வர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், தொழி லாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.