tamilnadu

img

பாரதியார் பிறந்த நாள் விழா

திருச்சிராப்பள்ளி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் மற்றும் தியாகி பரமசிவம் வாசகர் மன்றம் சார்பில் மகாகவி பாரதியார் 138 பிறந்தநாள் விழா மற்றும் பேச்சு போட்டி, ஓவியப் போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் தலைமை வகித்தார்.  குடியிருப்போர் நலசங்க மாநகர ஒருங்கிணைப்பாளர் லெனின், கவிஞர் யோகேஸ்வரி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு தமுஎகச மாவட்டச் செயலாளர் ரங்க ராஜன் உள்ளிட்ட பலர் பரிசுகளை வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

;