tamilnadu

img

மண்டல விளையாட்டுப் போட்டி ஏவிசி கல்லூரி மாணவர்கள் சாதனை

மயிலாடுதுறை, செப்.6- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏவிசி கல்லூரி மாணவர்கள் மண்டல அளவிலான வாலிபால் மற்றும் பால் பேட்மிட்டன் போட்டிகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். திருவாரூர் மாவட்டம் குடவாசலில் குடவாயிற் கோட்டம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்த தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல விளையாட்டு போட்டிகளில் ஏவிசி கல்லூரி பிபிஏ, பி.காம், பி.ஏ வரலாறு, பி.எஸ்.சி கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளை சேர்ந்த இரண்டாமாண்டு மாணவிகள் எஸ்.கிருபா, எஸ்.சுவேதா, கே.ஆர்த்தி, எஸ்.அபர்ணா, எம்.மகா, எம்.விஷ்ணுஸ்ரீ, எம்.சரண்யா, எம்.காவியா ஆகியோர் வாலிபால் போட்டியிலும், பால் பேட்மிட்டன் போட்டியில் இரண்டாமாண்டு பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், இரண்டாமாண்டு பி.ஏ ஆங்கிலம், பிபிஏ, மூன்றாமாண்டு பி.எஸ்.சி வேதியியல், பிசிஏ ஆகிய பாடப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் வி.ஆதிராஜ், யூ.சர்குணன், பி.பிரதீப், வி.குபேந்திர குணபாலன், எஸ்.குமரகுரு, ஆர்.அரவிந்தன், கே.பாலவிக்னேஷ்குமார், எம்.டி.இராசுதீன், கே.வெங்கடபிரசன்னா ஆகியோர் முதலிடம் பெற்று சாதனைப் படைத்தனர்.  சாதனை மாணவர்களை, கல்லூரியின் தலைவர் என்.விஜயரெங்கன், செயலர் கே.கார்த்திகேயன், பொருளாளர் என்.ஞானசுந்தர், கல்லூரியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், முதல்வர் இரா.நாகராஜன், உடற்கல்வி இயக்குநர்கள் ஜெ.ராஜ்குமார், எம்.கீதா உள்ளிட்டோர் பாராட்டினர்.