tamilnadu

img

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஆட்டோ ஸ்டாண்ட், தரைக்கடைகள் அகற்றுவதை கைவிடக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை,20- சிஐடியு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்கத்தின் கல்பனா ஆட்டோ ஸ்டாண்ட் ஆண்டு பேர வைக் கூட்டம் சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவை தலைவர் ராஜூ தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். மாவட்ட நிர்வாகிகள் அழ கப்பன், பக்ருதீன்பாபு, அப் பாஸ் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக கணேசமூர்த்தி வர வேற்றார். அப்துல்ஷரீப் நன்றி கூறினார்.  கூட்டத்தில் சாலை பாது காப்பு சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் திருச்சி மாநக ரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட், தரைக் கடைகளை அப்புறப் படுத்துவதை கைவிட வேண் டும். பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும். இன்சூரன்ஸ் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் உள் பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;