புதுக்கோட்டை, செப்.6- புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கோவில் வீரக்குடி கிராமத்தில் எஸ்.கலைச்செல்வத்திற்கு சொந்தமான (புல எண்:375ஃ17) வீட்டுமனை உள்ளது. கலைச்செல்வம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குன்றாண்டாகோவில் ஒன்றியச் செயலாளராக உள்ளார். கலைச்செல்வம் தனது பகுதி மக்களுக்கான போராட்டங்களில் தொடர்;ச்சியாக ஈடுபட்டு வருவது அபபகுதியில் உள்ள சில சுயநல சக்திகளுக்கு பிடிக்கவில்லை. இதனால், கலைச்செல்வத்தை பழிதீக்கும் நோக்கத்தில் அவரது வீட்டுமனைக்கான இடம் பொதுப்பா தைக்கானது என போலியாக ஆவணங்களை தனி நபருக்கு ஆதரவாக அதிகாரிகள் திருத்தியுள்ளனர். அந்தப் பகுதியில் பொதுப்பாதை இருந்தும் வேண்டுமென்றே மன உளை ச்சலுக்கு உள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் கலைச்செல்வன் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். எனவே, கலைச்செல்வத்தின் குடும்பத்தினருக்கு சொந்தமான வீட்டுமனை இடத்தை போலீயாக ஆவணங்கள் தயாரித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், போலி ஆவணங்களை ரத்துசெய்யக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீரனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் ஒன்றியத்தலைவர் சி.புகழேந்தி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணைச் செயலாளர் வி.இளையராஜா, ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.தங்கவேல், விதொச ஒன்றியச் செயலாளர் பி.மருதப்பா மற்றும் தோழமைச்சங்க நிர்வாகிகள் பேசினர். போராட்டத்தைத் தொடர்ந்து குளத்தூர் வட்டாட்சியர் வரதராஜன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆவண க்காப்பகத்தில் உள்ள பதிவேடுகளைப் பெற்று வட்ட மற்றும் கிராமக் கணக்குகளில் அனுமதியில்லாமல் கலைச்செல்வத்திற்கு சொந்தமான இடத்தில் செய்யபட்;ட மாறுத ல்களை ஒருவார காலத்திற்குள் பழைய நிலையிலேயே தொடர்வதற்கு உரிய நடவடி க்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்தனர்.