tamilnadu

img

நூறு நாள் வேலை ஊதியம் கேட்டு வந்த மூதாட்டி மீது தாக்குதல்

தஞ்சாவூர், ஜூன் 19- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பளம் கேட்டு வந்த மூதாட்டியை தாக்கிய ஒன்றிய ஆணையரின் கார் ஓட்டுநரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை இட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டை நடுத்தெரு வைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண் களுக்கு இரண்டு ஆண்டு காலமாக 100 நாள் வேலை திட்டத்தில் பணி யாற்றியதற்கு ஊதியம் வரவில்லை யென்று, திங்கள்கிழமை தஞ்சையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடியாக ஒரத்தநாடு ஒன்றிய அலு வலகத்தில் சென்று உங்கள் ஊதி யத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறி வுறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாய்க்கிழமை ஒரத்த நாடு ஒன்றிய  அலுவலகம் வந்துள்ள னர்.   அப்பொழுது, அங்கு துறை சார்ந்த அலுவலர்கள் இல்லாததால் பொது மக்கள் ஏமாற்றத்துடன் நின்றிருந்த னர். அப்போது அங்கு குடிபோதையில் நின்ற ஒன்றிய அலுவலக வாகன ஓட்டு னர் செந்தில் என்பவர், ஈச்சங்கோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி புஷ்பம் என்பவரை தகாத வார்த்தை களால் திட்டி அவரை அடித்ததாக கூறப்படுகிறது.  இதில் ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரத்தநாடு ஒன்றிய அலுவலகம் முன்பாக நின்று முற்றுகையில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்து வந்த பத்திரிகையாளர்கள் ஒன்றிய அலுவலகம் சென்ற பொழுது செந்திலோடு பணியாற்றும் சக ஓட்டு னர்கள் அவரை பிடிஓ காரில் வைத்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவின் பேரில் வாகன ஓட்டுநர் செந்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.