tamilnadu

img

குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இயங்கும் அங்கன்வாடி

தஞ்சாவூர், ஜூலை 9- தஞ்சாவூர் மாவட்டம் பொன்னாங் கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இங்கு 300 க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்ற னர். இப்பள்ளியின் வளாகத்தில், நுழைவாயில் இடதுபுறமாக அங்கன்வாடி உள்ளது.  கடந்த 1991 ஆம் ஆண்டு கட்டப்பட்ட, இக்கட்டடம் தற்போது காரைகள் பெயர்ந்தும், சுவர்கள் விரிசல் ஏற்பட்ட நிலையில், அஸ்திவாரம் ஆட்டம் கண்ட நிலையில் உள்ளது. ஜன்னல்கள் பெயர்ந்து கீழே விழுந்து விட்ட நிலையில் இக்கட்டடம் பாது காப்பற்ற நிலையில் உள்ளது.

இதனால் இங்கு வரும் 26 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.  மேலும் அங்கன்வாடிக்கென ஒரு பணியாளர் மட்டுமே உள்ள நிலையில், சமையலுக்கு என தனியாக ஆள் இல்லாத நிலை உள்ளது. இங்கு பணியில் இருந்த சமையலர் இடம் காலி யான பிறகு, புதிதாக ஆள் நியமிக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே இருந்த சமையலரின் உறவினர் பெண் சம்பளம் ஏதும் பெறாமல் சமைத்துக் கொடுப்பதாக தெரிகிறது. சில நேரங்களில் அங்கன்வாடி பணியாளரே சமைத்து எடுத்து வரு வதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழக தலை வர் சு.கணேசன் கூறுகையில், “பள்ளிக்குழந்தைகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள அங்கன்வாடி கட்டி டத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சி யர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இடிந்து விழும் நிலை யில் உள்ள கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டித் தர வேண்டும்’ என்றார்.

 இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகை யில்,’ அங்கன்வாடி நீண்ட நாள்களாக அருகில் உள்ள முன்னாள் சமையலர் வீட்டில் இயங்கி வந்தது. அவர்களும் எத னையும் எதிர்பாராமல், சம்பளமின்றி சமைத்து தந்ததோடு, குழந்தைகளுக்கும் இடம் தந்து உதவினர். தற்போது பள்ளி யில் எல்கேஜி., யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால் அங்கன்வாடி குழந்தைகள் அங்கு அமர வைக்கப்பட்டுள்ள னர்’ என்றனர்.  இதுகுறித்து பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது,’ கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளதாக எந்தப் புகாரும் வரவில்லை. நீங்கள் ஊட்டச்சத்து அலு வலரிடம் கேளுங்கள்’ என்றார்.  ஊட்டச்சத்து அலுவலரிடம் இதுகுறித்து கேட்ட போது,’ சமையலர் பணி இடம் காலியாக உள்ளது’ என்றதோடு முடித்துக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற் படும் நிலை உள்ளது.