குடவாசல்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆட்சியர் ஆனந்த் புதன் கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளை பார்வையிட்டார். பின்னர் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில கற்றல் திறனை ஆய்வு செய்தார். மாணவர்கள் நன்றாக வாசித்ததால் ஆசிரியர்களை பாராட்டினார். பின்னர் ஜாலி போனிக்ஸ் ஆங்கிலம் கற்பித்தல் முறைகளை பற்றி ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளி வளாகம், கழிவறைகள் துய்மையாக பராமரிக்கப்படு கின்றனவா, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சத்துணவு கூடத்தில் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் போது வலங்கைமான் வட்டாரத் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி, தலைமையாசிரியை கலா, துறையின் அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.