tamilnadu

img

திருச்சியில் ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி, மே 17-திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி பெரியகம்மாளத் தெருவில் உள்ள ஒரு கடைக்கு சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சித்ரா தலைமையில் வெள்ளியன்று அதிகாரிகள் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் 2 டன் எடை புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.4 லட்சம். தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை கடைகளில் விற்பனை செய்தால் உடனடியாக 94440-42322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.