tamilnadu

திருச்சி மாநகராட்சி வளர்ச்சிக்கு 30 பணிகள் புதிதாக 15 பூங்கா அமைக்க உத்தரவு

திருச்சிராப்பள்ளி, செப்.12- திருச்சி மாநகராட்சி பகுதி எங்கும் மாநகராட்சிக்கு சொந்த மான இடங்களில் பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல், உடற்பயிற்சி ஜிம் என பல்வேறு திட்டங்களை மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டு மக்களும் இதனை முழு அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மாநகராட்சி பகுதி யில் 30 பூங்காக்கள் 1371.62 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு, உடற் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமா இதுவரை 30 ஜிம்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 30 பணிகள் ரூ.1372 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. திருச்சி மாநகராட்சியில் பொது மக்கள், பெரியவர்கள், பள்ளி மற் றும் கல்லூரி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில மற்றும் மாநகராட்சியின் பொது நிதி, அம்ரூத் மற்றும் சீர்மிகு நகரத்தின் கீழ் பூங்காக்கள் அமையப்பட்டுள்ளது. அதில் பொது நிதியில் 13 பூங்காக்கள் ரூ.283 லட்சத் தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அம்ரூத் திட்டத்தில் கீழ் 12 பூங்காக்கள் ரூ.863.70 லட்சத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள் ளது. சீர்மிகு நகரத்தின்கீழ் 6 பூங்காக் கள் ரூ.390 லட்சத்தில் முடிக்கப் பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், பொதுநிதியில் 5 பூங்காக்கள், சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் 10 பூங்காக்கள் ரூ.1032.00 லட்சத்தில் வேலை நடைபெற்று வருகிறது.  அண்ணா அறிவியல் பூங்கா வில் உள்ள உபகரணங்களின் பயன்பாடுகள் பின்வருமாறு: காற்றழுத்தமானியின் அமைப்பு தூணில் பொருத்தப்பட்டுள்ளது. காற்றழுத்தமானி உதவியுடன் அந்தப் பகுதியில் உள்ள காற்றில் வேகம் உடனுக்குடன் அறிய முடி யும். மூன்று காற்றழுத்தமானிகள் ஒரு கருவியுடன் இணைக்கப்பப் பள்ளது. இதன் உதவியுடன் காற் றின் வேகத்தை கிலோ மீட்டர் மணி எவ்வளவு என கணக்கிடலாம். வெவ்வேறு பருவகாலங்களிலும் புயல் காலங்களிலும் காற்றின் வேகம் கணக்கிடப்படுகிறது. காற்றழுத்தமானி உதவியுடன் காற்றின் அதிகபட்ச வேகத்தை குறித்துக் கொள்ளலாம். மேற் கண்ட காற்றின் திசைவேகம் பற்றிய குறிப்புகள் வானிலை ஆய்வு மற்றும் காற்றாலை உதவியுடன் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தலாம்.

ஆற்றலின் சுழற்சி 
சக்கரம் மற்றும் சங்கிலி அமைப் பின் உதவியால் பந்தினை உயர்த்தி உயர்பாதையில் நகரும்படி செய்ய வும். பந்து நகரும்போது பந்தில் உள்ள நிலையாற்றல் அனைத்தும் இயக்க ஆற்றலாக மாற்றம் அடை கிறது. பந்து பல்வேறு நிலைக்கு செல்லும்போது வெவ்வேறு விசைகள் செயல்பட்டு இறுதியாக பந்து ஓய்வு நிலைக்கு வருகிறது. இதிலிருந்து நிலையாற்றல், இயக்க ஆற்றல், மையவிலக்கு விசை மற்றும் வேலை ஆற்றல் என பல் வேறு நிகழ்வுகள் நமக்கு தெரிகின் றது இதுவே ஆற்றல் சுழற்சி எனப்படும்.
எதிரொலி
குழாயின் வாய்ப்புறத்து அரு கில், வணக்கம் என்று கூறவும். மறு முனையிலிருந்து ஒரு தெளிவான எதிரொலி கேட்கலாம். அதே போன்று கையைத் தட்டும் பொழுது தொடர் எதிரொலிகள் கேட்கின்றன. ஒலி அலைகள் குழாயின் ஊடாக வினாடிக்கு 330 மீட்டர் வேகத்தில் பயணித்து மீண்டும் குழாயின் பின் புறத்தில் பிரதிபலித்து திரும்பி வரு கின்றன. எதிர்வரும் ஒலியானது பத் தில் ஒரு வினாடிக்கு தாமதித்து வந் தாலும், தெளிவான எதிரொலி யினைக் கேட்க முடிகிறது.

மிதக்கும் பறவை
 இங்கு ஒரு பறவை அதனு டைய அலகினால் மட்டுமே தாங்கப் படுகிறது. நீங்கள் பறவையின் வால் அல்லது சிறகுகள் கீழே தள்ளலாம். என்ன ஆகிறதென்று பாருங்கள். பறவையை அதன் அலகை மையமாக வைத்து சுற்றலாம் கூட இந்த மாதிரி அத னுடைய ஸ்திரத்தன்மையை குலைக்கும் முயற்சிகளாலும் அது கீழே விழாது. புவி ஈர்ப்பு மையத்தின் இடம் அதிகமான ஸ்திரத் தன்மை இருக்குமாறு திட்டமிடப் பட்டிருக்கிறது. எந்த ஒரு பொரு ளின் ஸ்திரத்தன்மைக்கும் அதனு டைய புவிஈர்ப்பு மையத்தின் இடம் மிக முக்கியமானதாகும். அதனு டைய ஸ்திரத்தன்மையை இழந்து விடுகிறது. இங்கு பறவையின் புவி ஈர்ப்பு மையத்தின் இடம் மாறாமல் இருப்பதால் அது எந்த நிலையி லும் ஸ்திரமாகவே இருக்கிறது.
உராய்வு எங்கணம் உதவுகிறது 
இரண்டு கூம்புகளையும் இரண்டு உருளைகளையும் உயர்த்திப் பார்த்தால் தலைகீழ் உள்ள கூம்பை  எளிதாக உயர்த்த முடிகிறது. சுர சுரப்பாக உள்ள உருளையை எளி தாக உயர்த்த முடிகிறது. தலைகீழ் உள்ள கூம்பின் அடிப்பகுதி அகல மாக உள்ளதால் தூக்க எளிதாக உள்ளது. சாதாரணமாக உள்ள உரு ளையின் பக்கங்கள் வழுவழுப்பாக உள்ளதால் தூக்க இயலவில்லை.  உராய்வு இல்லையேல் உலக இயக்கம் மிகவும் கடினமாக இருக்கும்.

நிப்காவின் வட்டு
கைப்பிடியை சுழற்சி வட்டின் மேல்பகுதியினுள் உள்ள சிறு துவா ரங்கள் வழியாக உற்று நோக்கிட வும், வட்டில் உள்ள துவாரங்கள் ஒவ்வொன்றும் பின்னாள் அமைந் துள்ள படத்தின் ஒவ்வொரு பகுதி யிலும் ஊடுருவிச் செல்கிறது. இத னால் நாம் முழுப் படத்தினையும் தெளிவாக பார்க்க முடிகிறது. பால் நிப்கோ என்கின்ற அறிவியல் அறி ஞர் 18ம் நூற்றாண்டின் இறுதியில் கண்டறிந்ததின் வாயிலாக அவரது பெயரால் இவ்வட்டு அழைக்கப்படு கிறது. நிப்கோ வட்டின் தத்துவம் ஆரம்ப காலத்து தொலைக்காட்சி ஒளிபரப்பில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.