tamilnadu

தூத்துக்குடி முக்கிய செய்திகள்

2 பெண்களிடம் நகை பறிப்பு

தூத்துக்குடி, மே 17-தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் வேலய்யா. இவரது மனைவி பொன்னம்மாள் (63), வியாழனன்று பண்டாரவிளையில் நடந்த திருமண விழாவிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 8.30மணியளவில் ஊர் திரும்பிச் செல்வதற்காக அங்கிருந்து பஸ் ஸ்டாப்பிற்குநடந்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினைபறித்துச் சென்றுவிட்டனராம். செய்துங்கநல்லூர் அருகேயுள்ள சேரக்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சேவியர்ஜான் பிரிட்டோ. இவரது மனைவி பாலம்மாள் (35) இவர்தனது வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2ஙூ பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றுவிட்டாராம். இதுகுறித்து புகாரின் பேரில் சேரகுளம் போலீசார்வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருமணமான இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

தூத்துக்குடி, மே 17-தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், கயத்தாறுஅருகே உள்ள ஒலைகுளம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர பெருமாள். இவரது மனைவி முத்துமாரி(25). இந்த தம்பதியருக்கு கடந்த 15 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், முத்துமாரிக்கு கடந்த 48 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் வியாழனன்று வீட்டில் தனியாக இருந்த முத்துமாரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டாராம். உடல் கருகிய நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்சிகிசிசை பலனின்றி இறந்தார். அவரது மரணத்திற்கு வேறுஎதுவும் காரணம் உள்ளதா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கோவில்பட்டி டிஎஸ்பி ஜெயராஜ் வழக்குப் பதிவு செய்துள்ளார். திருமணமாகி ஒன்றே கால் வருடங்களே ஆவதால் இது தொடர்பாககோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

;