பெரம்பலூர், மே 17-பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் வெள்ளியன்று முதல் கட்டமாக தணிக்கை செய்யப்பட்டன. திருச்சி- சென்னை நெடுஞ்சாலை தண்ணீர் பந்தல் பகுதியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில் 245 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. தீயணைப்புக் கருவி, முதலுதவி பெட்டி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, அவசர கால வழி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது. ஆய்வில் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்(பொ) ஜெய தேவராஜ், டிஎஸ்.பி ரவீந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் அருள் அரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.