tamilnadu

img

166 பேருக்கு 10 நாட்களில் பட்டா பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு

திருச்சிராப்பள்ளி, செப்.3- திருச்சி மேற்கு தொகு திக்குட்பட்ட ரஞ்சிதபுரம், சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனை, பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையில் அப்பகுதி மக்கள் கடந்த 2017-ம் ஆண்டு 468 பேர் மனு அளித்திருந்தனர். ஆனால் இந்த மனு க்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. எனவே இந்த மனு க்கள் மீது உரிய நடவடி க்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக்குழு செயலாளர் கார்த்திகேயன் தலை மையில் பொதுமக்கள் வியாழனன்று திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் நினைவூட்டல் மனு கொ டுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை தொடர்ந்து நில அளவை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் கட்சி யின் பொன்மலை பகுதி க்குழு உறுப்பினர் சீனிவா சன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் கடந்த 2017-ம்  ஆண்டு மனு அளித்த 468  பேரில் ஏ.இ.17வது வார்டுக ளில் 166 பேருக்கு 10 நாட்க ளுக்குள் பட்டா வழங்குவது, மீதமுள்ள மனுக்களை முழு மையாக விசாரித்து தகுதியா னவர்களுக்கு பட்டா வழங்கு வது என முடிவானது.