திண்டுக்கல் சவேரியார்பாளையத்தில் ஆதரவற்ற மற்றும் நலிவடைந்தவர்கள் 50 பேருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு நூறு நாட்கள் நிறைவடைந்தது. நூறாவது நாளையொட்டி நகர் செயலாளர் ஆஸாத், சி.பி.ஜெயசீலன், தவக்குமார், அன்னவாசல் ஒருங்கிணைப்பாளர் சகாயபிரான்சிஸ், சவேரியார்பாளையம் சுவான், மத்தியாஸ், ஏஞ்சல், அஜீத், வடிவேல், அமர்நாத், வில்சன் மற்றும் அன்னவாசல் குழு உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து நிதிஉதவி, பொருள் உதவி வழங்கிய நன்கொடையாளர்களை பாராட்டினர்.