tamilnadu

கொடைக்கானலில் பெட்ரோல் 102 ரூபாய்....

திண்டுக்கல்:
ஒன்றிய அரசு தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல நகரங்களில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகிறது. தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ரூ.98-ஐ நெருங்கி பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

கொடைக்கானலில் பிரிமீயம் ரக பெட்ரோல் விலைரூ.102.50-ஐ தொட்டது. அதே போல் 1 லிட்டர் டீசல் ரூ.93.70-க்கு விற்பனையாகிறது. இதனால் வாகன ஓட்டிகள்  மற்றும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அரிசி, காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது. பெட்ரோல் விலை கொடைக்கானலில் தற்போது ரூ.100-ஐ தாண்டி விற்கப்படுகிறது. ஏற்கனவே ஊரடங்கால் மக்கள் பெரும் துயரத்தில் உள்ள  நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் மேலும் சுமையை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலையுடன்  கூறினர்.

;