tamilnadu

கொரோனா முன்னேற்றம் இதுதானோ? டாஸ்மாக் கடையாக  மாறிய தள்ளுவண்டிகள்

திண்டுக்கல், ஜூன் 29-  திண்டுக்கலில் சாலையோரங்களில் உள்ள தள்ளு வண்டிகளில் மதுபான விற் பனை ஜோராக நடைபெற்றுவருகிறது.  தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகள் கொரோனா பாதிப்புக்கு முன்பு மதியம்  12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. பின்பு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை  திறக்கப்பட்டுள்ளது.  ஆனால் மது பிரியர்களோ இரவு 8  மணி முதல் காலை 10 மணி வரை மது பானங்களை வாங்க திண் டாடி வருகின்றனர். இவர்களது கவலை யைப் போக்க தற்சமயம் திண்டுக்கல் பகுதி களில் சில்லரை  விற்பனையாளர்கள் உள்ள னர். மதுபானங்களை  அரசின் அனுமதி பெறா மல் விற்பனை செய்து வருகின்றனர். திண் டுக்கல்-நத்தம் சாலையைச் கிழக்கு மரியநாத புரம், மேற்கு மரியநாதபுரம், குள்ளனம்பட்டி, பர்மாகாலணி, பொன்நகரம், சாமியார் தோட்டம் பகுதிகள் உள்ளன. நத்தம் சாலை யில் உள்ள சில தள்ளுவண்டிக்  கடைகளில் அரசு  அனுமதி இன்றி அதிகாலை முதல் எந்த வித அச்சமுமின்றி திறந்த வெளியில் மது விற்பனை நடைபெறுகிறது.  மது பிரியர்கள் வந்து மது அருந்தி செல்கின்றனர். இது அப் பகுதி மக்களிடையே பெறும்  அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. மதுவிலக்கு காவல் துறையினர் மௌனமாக உள்ளளனர்.