லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, அமலாக்கத்துறை அதன் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீசார் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி கைது செய்தனர். அங்கித் திவாரியின் அலுவலக அறை மற்றும் மடிக்கணினியில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, அங்கித் திவாரி தரப்பில் 3 முறை ஜாமின் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னை நீதிமன்றம் மதுரை கிளை அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் ஜனவரி 24ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்த சூழலில், அங்கித் திவாரியை அமலாக்கத்துறை அதன் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை - பாஜக பிரமுகர் கைது!
நாகர்கோவில் அருகே பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாஞ்சில் ஜெயக்குமார். இவர் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
அப்போது, சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு நாஞ்சில் ஜெயக்குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அவரது செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு வக்கிரமாகப் பேசியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர், பா.ஜ.க பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப்பதிவு அவரை கைது செய்துள்ளனர்.
போலீசார் விசாரணையில், நாஞ்சில் ஜெயக்குமார் மீது பண மோசடியில் பண மோசடி உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.