கொரோனா நிதி வழங்கியஒரு வயது குழந்தை
திண்டுக்கல், மே 31- திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் கீர்த்தனா. இவரது மகன் ராம தாஸ். குழந்தையின் முதலாவது பிறந்ததின கொண்டாட்டத்தை கொரோனா பரவலால் தவிர்த்து விட்டார். பிறந்தநாள் நிகழ்விற்காக சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயி ரத்தை கொரோனா நிவாரண நிதி யாக ஆட்சியர் மு.விஜயலெட்சுமி யிடம் வழங்கினார்.
தேனியில் மாதர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி, மே 31- கொரோனா ஊரடங்கு காரண மாக பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு ரூ.7,500 வழங்க வேண்டும், குடும்ப வன்முறையால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட லூரில் ஜனநாயக மாதர் சங்கம் சார் பில் முத்துப்பிள்ளை தலமையில், தேன்மொழி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிவாரண பொருட்கள் வழங்கல்
திருவில்லிபுத்தூர், மே 31- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருவில்லிபுத்தூர் கிளைசார்பில் விதவைகள் ஆதரவற்ற பத்து குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு ஆகியவை சங்க மாவட்ட நிர்வாகி ரேணுகா, ஆண் டாள் கோவில் செயல் அலுவலர் அ.இளங்கோவன் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.