நத்தம், ஜூன் 8- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேஉள்ள சரளைப்பட்டியைச் சேர்ந்தவர்சின்னதுரை (56). அதே ஊரைச் சேர்ந்தவர் கண்ணபிரான் (26). இவர்கள் இருவருக்கும் இடப் பிரச்சனை சம்மந்தமாக முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கண்ணபிரான் தனது தோட்டத் திற்கு வேலி அமைத்துள் ளார். அப்போது இது சம்மந்தமாக சின்ன துரைக்கும், கண்ணபிரானுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் கோபமடைந்த கண்ணபிரான் தான் மறைத்து வைத்தி ருந்த அரிவாளை எடுத்து சின்னதுரை, அவரது மகள்கள்வசந்தி, அம்சவள்ளி ஆகியோரை வெட்டியுள்ளார். படுகாய மடைந்த மூன்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். வழக்குப்பதிவு செய்து கண்ணபிரானை கைது செய்தனர்.