திருக்கோவிலூர்,ஜன.16- திருக்கோவிலூர் திருக்குறள் கழக அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் நாள் வியாழனன்று (ஜன.16) கொண்டா டப்பட்டது. திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருக்குறள் கழக அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைவர் கவிமாமணி சிங்கார. உதியன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை இணை ஆணை யர் ஆ.சிவகுருநாதன், கலாம் மாணவர் விழிப்புணர்வு இயக்க மாவட்டத் தலைவர் பொன்.முருகன், கணித அறிஞர் ஜி.ஜான கிராமன், ஆசிரியர் க.ராமேஷ்பாபு, கவிஞர் தேவனூர் செல்வராஜி, தற்காப்புக்கலை நிபுணர் முருகன் ஆகியோர் திருக்குறள் முற்றோதல் செய்தனர். ராணுவ வீரர் கல்யாண்குமார், புகைப் பட இயக்குநர் அன்பு கவுதம் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாண வர்களுக்கு பரிசும், பாராட்டுச்சான்றும் வழங்கினர். விதை விருட்சம் தலைவர் சிதம்பரநாதன், நல்லாசிரியர் சாதிக் கௌஷ், தமிழ்ச்சங்க துணைத் தலைவர் ப.ரவி, நூலகர் மு.சாந்தி ஆகியோர் திருக்குறள் அதிகார விளக்கவு ரையாற்றினர். திருக்குறள் சு.ராஜகோபால் நன்றி கூறினார்.