tamilnadu

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

பென்னாகரம், மார்ச் 16- தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் லுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், செட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவ ருடைய மகன் பார்த்திபன் (28). இவர் தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொருத்தும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திங்களன்று தனது நண்பர்களுடன் ஒகேனக்கல்லை சுற்றிப் பார்க்க வந்தனர். அப்போது ஊட்டமலை பரிசல் துறையில் குளித் துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக பார்த்திபன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒகேனக்கல் தீயணைப் புத் துறை அதிகாரி ஜெயசந்திரன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் ஆற் றில் மூழ்கிய பார்த்திபனின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னா கரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து ஒகேனக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;