தருமபுரி, டிச.7- தருமபுரி நகராட்சி 17ஆவது வார்டு கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ள பாதாள சாக்கடை குழாய் உடைந்து, அருகில் உள்ள காலி இடத்தில் தேங்குவ வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. தருமபுரி நகராட்சி 17ஆவது வார்டு கந்தசாமி வாத்தியார், முத்து மாரியம்மன் கோயில் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சாக்கடை நீர் வெளியேற அகலம் குறைந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை கழிவு நீர் முறையாக வெளி யேறும் வகையில் இணைப்பு செய்யப் படவில்லை. இந்த தெருவில் அமைக்கப் பட்டுள்ள பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறைந்த அளவு சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் அருகில் உள்ள காலி இடத்தில் குளம் போல தேங்கியுள்ளது.இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசு கிறது.மேலும் டெங்கு,வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய் ஏற் பட்டு மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற் பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் வெளி யேறாமல் குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ள காலி இடத்தில் ஏரி போல் தேங்கி யுள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல் வேறு தொற்று நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறோம். இது சம்பந்தமாக நகராட்சி ஆணையரிடம் பல முறை மனு அளித்தும்,நேரில் வலியுறுத்தியும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. எனவே இப்பகுதியில் உடைந்துள்ள பாதாள சாக்கடை குழாயை சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை இணைப்பை முறைப்படுத்தி ராஜாபேட்டையில் அமைக் கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலை யத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இக் கோரிக்கையில் மாவட்ட நிர்வாகம் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.