விளைநிலங்களை மட்டுமே நம்பியிருக்கும் விவசா யிகளின் வாழ்வாதாரம் தற் போது மத்திய, மாநில அரசு களின் நடவடிக்கையால் கேள்விக்குறியாகியுள்ளது. ஆண்டாண்டு காலமாக விவ சாயம் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. விவசாயிகள் தங்களது விளைநிலங்களி லிருந்து கிடைக்கும் பொருட் கள் நல்ல விலைக்கு விற்கப் படும் என்ற நம்பிக்கையோடு இன்று வரை விவசாயத்தில் ஈடு பட்டு வருகின்றனர். ஆனால் கடுமையான வறட்சியின் காரண மாக விவசாயம் பொய்த்துப் போய் கொண்டிருக்கிறது. தரும புரி மாவட்டத்தில் விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற் கொலை செய்து கொள்ளுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய அரசின் பவர்கிரீட் நிறுவனமும், மாநில அரசின் மின் தொடர் அமைப்பு கழகமும் இணைந்து விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை செய்து வரு கின்றன. இந்நிலையில் விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கப்படுவ தால் விளைநிலங்கள் முற்றிலு மாக மதிப்பிழந்து வருகிறது. மேலும் இந்த நிலங்களை விற் கவே, விவசாயம் செய்யவோ முடியாத நிலைக்கு விவசாயி கள் தள்ளப்பட்டுள்ளனர். இத னால் விளைநிலங்கள் எதற்கும் பயன்படாத பாலை வனம் போல் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தை பொறுத்த வரையில் சிறு மற்றும் குறு விவ சாயிகள் அதிகளவில் உள் ளனர். இதில் பெரும்பான்மை யான விவசாயிகள் ஒரு ஏக்கர் அல்லது இரண்டு ஏக்கர் நிலங் களை மட்டுமே வைத்துக் கொண்டு விவசாயம் செய்து வரு கின்றனர். இந்த விளை நிலங் களிலும் உயர் மின் கோபுரங்கள் தற்போது அமைக்கப்படுகிறது. இந்த உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமையும் மின் பாதைகளில் உள்ள விளைநிலங் களில் சுமார் 120 மீட்டர் அகலத் திற்கு எவ்வித சாகுபடியோ, மரங் களோ வளர்க்கக்கூடாது. கட்டு மானப் பணிகளும் செய்யக் கூடாது. மேலும் மின் பாதைகள் செல்லும் வழியில் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்படு கிறது. இதனால் சிறு, குறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். மேலும் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் அருகாமையில் உள்ளவர்களுக்கும், கால்நடை களுக்கும் மின் காந்த அலை யால் கருத்தரித்தல் தடை ஏற் படுகிறது. மேலும் உடல் உபாதைகள் ஏற்படுவதாக உலக சுகாதார மையம் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் வறட்சி மாவட்டமான தருமபுரியில் விவ சாயிகளின் வாழ்வாதாரங்களை பறிக்கும் வகையில் புகழூர் முதல் சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் வரையில் 80 கிலோ வாட் மின் சாரமும், இராசிபாளையம் முதல் பாலவாடி வரை 765 கிலோ வாட் மின்சாரமும், ராசிபுரம் முதல் தாளவாடி வரை 400 கிலோ வாட் மின்சாரமும், பாலவாடி முதல் பெங்களூரு மற்றும் திருப்பத்தூர் வரை 230 கிலோவாட் மற்றும் 110 கிலோ வாட், 66 கிலோ வாட், 33 கிலோவாட் என பல்வேறுஉயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வரு கிறது. இதில் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரியமங்கலம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி ஆகிய பகுதிகளில் உயர் அழுத்த மின் கோபுர மின் பாதைகள் செல் கின்றது. இதனால் ஆயிரக் கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட மக்கள் விவசாயத்தை மட்டுமே மூல ஆதாரமாக நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சமீப காலமாக விளைவிக்கும் பொருட் களுக்கு நல்ல விலை கிடைக்காத நிலை, வறட்சியின் காரணமாக விவசாயம் பொய்த்துப்போன காரணத்தாலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங் களுக்கு வேலைக்காக சென்று கொண்டிருக்கிறார்கள். இந் நிலையில் எஞ்சியுள்ள விவசாயி களை மத்திய, மாநில அரசுகள் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதன் மூலம் விவசாயி களை வஞ்சித்து வருகின்றன. விவசாயிகள் தங்களது வாழ் வாதாரம் பாதிக்கப்படுவதாக நீதிமன்றத்தையும் நாடும்போது ‘பொதுநலன்’ என்று ஒற்றை வார்த்தையின் மூலம் வாழ் வாதாரத்தை குழிதோண்டிப் புதைத்து விடுகின்றனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவாக செயல்படுகிறது. உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது நிகழ்கால உண்மையாகி உள்ளது. எனவே பாதிக்கப் பட்ட விவசாயிகள் அணிதிரண்டு போராடுவதன் மூலமாகத்தான் இதனை முறியடிக்க முடியும் என்பது நிதர்சனம்.