தருமபுரி, பிப். 13- பழங்குடியினரை தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாழ னன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது, தரும புரி மாவட்டம், அரூா் அருகே சிட்லிங் ஊராட்சிக்குட்பட்ட காளியான்கொட்டாய் மற்றும் நம்மங்காடு பகுதியில் சுமார் 4 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை பல ஆண்டுகளாக பழங் குடியின மக்களாகிய எங்களது அனுப வத்தில் உள்ளது. இந்நிலையில் பழங்குடி யினத்தைச் சேராத தனி நபா் ஒருவர் நிலத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். இது தொடா்பாக தருமபுரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதியன்று மீண்டும் இந்த நிலத்தைக் கைப்பற்ற முயற்சித்தார். இதை தடுத்த எங்களை தாக் கினா். மேலும் இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்து எங்களின் மீது கைது நடவ டிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் பெரும் அச்சத்துக்குள்ளாகி உள்ளோம். எனவே எங்களை தாக்கியவா்கள் மீது வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.