தருமபுரி, மே 14-தருமபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பள்ளி வாகன ஆய்வினை தருமபுரி சார் ஆட்சியர் ம.ப.சிவன் அருள் தொடங்கி வைத்தார்.தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 140 தனியார் பள்ளிகளில் 1,123 பள்ளிவாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் பள்ளி வாகனங்களை அனைத்து அம்சங்களும்சரியாக உள்ளதா என போக்குவரத்து ஆணையர் ஆய்வு செய்து சரியான வாகனங்களுக்கு சான்றுவழங்கப்படுகிறது. இந்த ஆய்வின்போது குறைகள் கண்டறியும் வாகனங்களை குறைகள் நிவர்த்திசெய்ய திருப்பி அனுப்பப்படுகிறது.சுட்டிக்காட்டப்பட்ட குறைகளைநிவர்த்தி செய்த பின்பு சான்று வழங்கப்படுகிறது. குறைகளை நிவர்த்தி செய்யாத வாகனங்களை பொதுச்சாலைகளில் இயக்க தடை செய்வதுடன், அனுமதி சீட்டுரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி வாகனங்களின்ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வாகனத்தினை பாதுகாப்பாக இயக்குவதற்கும் பள்ளி குழந்தைகளைபாதுகாப்பாக ஏற்றி இறக்கி விடுவதற்கும் அறிவுரை வழங்கப்படுகிறது. வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் உரிமங்கள் நடப்பில் உள்ளனவா என ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், இவ்வாகன ஆய்வுகள் மே17, 24, 31 ஆம் ஆகிய மூன்றுகட்டங்களில் அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு போக்குவரத்து ஆணையருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.இந்த ஆய்வின் போது வட்டாரப்போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என்.மணிமாறன், ராஜாமணி, அன்புசெழியன், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.