தருமபுரி, செப்.19- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட அள விலான வேலைநிறுத்த ஆயத்த விளக்கக் கூட்டம் வியாழனன்று தருமபுரியில் நடைபெற்றது. தருமபுரியிலுள்ள சிஐடியு அலு வலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன் தலைமை வகித் தார். இதில் கடந்த 36 ஆண்டு களாக சத்துணவு திட்டத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதிய மாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொடர் போராட்டங் களை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.அண்ணாதுரை, மாவட்டச் செயலாளர் சி.காவேரி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.லில்லி புஷ்பம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.இக்கூட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் கே.தேவகி நன்றி கூறினார்.