tamilnadu

மொரப்பூரில் நாளை ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

தருமபுரி,  ஆக.17- மொரப்பூரில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் திங்களன்று (ஆக.19) நடைபெறுகிறது.   தருமபுரி மாவட்டம், மொரப்பூர் துணை அஞ்சல் நிலையத்தில் இந்த சிறப்பு மு காம் நடைபெறுகிறது.ஆகஸ்ட் 19 ஆம்  தேதி  முதல் 21ஆம் தேதி வரை  நடை பெறும் இம்முகாமில் ஆதார் அடையாள  அட்டைக்கான புகைப்படம், விரல்  ரேகைகள் பதிவு மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  ஏற்கனவே ஆதார் அட்டை வைத்தி ருப்பவர்கள் அதில் உள்ள பிழைகளை திருத்தம் செய்தல், தொலைபேசி எண் களை மாற்றுதல், மின்னஞ்சல் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவைகளை திருத்தம் செய்ய உரிய ஆவணங்களை சமர்பித்து திருத்தம் செய்யலாம். ஆதார் அட்டை திருத்தம் செய்வதற்கான கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். அதேபோல், புதியதாக ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுப்பவர்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லை. 5 வயதுக்கு உள் பட்ட சிறுவர்களுக்கு ஆதார் அட்டைக்கு  புகைப்படம் எடுத்தால், சம்பந்தப்பட்ட வரின் தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டையுடன் நேரில் வர வேண்டும்.  மேலும், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி களில் ஆதார் புகைப்படம் எடுப்பதற்கான சிறப்பு முகாம்களை நடத்த கோரினால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வளாகத்தில் அஞ்சல் துறை சார்பில் சிறப்பு முகாம் நடத் தப்படும். மேலும், இது குறித்த விவரம் அறிய  விரும்புவோர் 04342-260932 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.