tamilnadu

img

திறந்தவெளி ஏரி கால்வாயால் சுகாதாரச் சீர்கேடு

தருமபுரி, ஆக. 29- தருமபுரி அருகே திறந்த வெளி ஏரி கால்வாயால் சுகா தாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ள தால், அதனை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலரி டம் மனு அளித்தனர். தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சிக் குட்ப்பட்ட பகுதியில் பிடம னேரி ஏரி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த ஏரி முழு கொள்ளவை எட்டி யது. இதனால் பிடமனேரி குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் புகுந்து வீடுமோ என்ற அச்சத்தில் மாவட்ட நிர்வாகம் இந்த ஏரி யில் இருந்து தண்ணீரை வெளியேற்ற நந்தி நகர் குடியிருப்புக்கு அருகாமையில் கால் வாய் அமைத்து ராமக்கள் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட்டனர்.

உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சிமெண்ட் கால்வாய் அமைக்காமல் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மண்ணை தோண்டி கால்வாய் அமைத்தனர்.  தற்போது ஓராண்டு காலமாகியும் நந்தி நகர் கால்வாய்ப் பகுதிக்கு சிமெண்ட் கால் வாய் அமைக்கவில்லை. இந்த கால்வாய் ஒட்டியுள்ள 50க்கும் மேற்பட்ட வீட்டின் தரைத்தள பகுதி மற்றும் சுவர்கள் ஈரப்ப தத்தால் விரிசல் விட்டு பெரும் சேதத்தை ஏற்படுத் தியுள்ளது. புதியதாக கட்டப்பட்ட வீடுகள் என பல வீடுகள் ஈரப்பதத்தால் சேதமடைந்துள்ளது.

மேலும், திறந்த வெளி கால்வாய் என்பதால் ஈ, கொசு உற்பத்தி ஏற்பட்டு சுகாதாரச் சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே, இந்த ஏரி கால்வாயை சிமெண்ட் கான்கிரீட் மூலம் சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.கிரை ஸாமேரி, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, நகரக்குழு உறுப்பினர்கள் வி.பி.சாமி நாதன், மாது உள்ளிட்ட அப் பகுதி மக்கள் தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைசெல்வியிடம் மனு அளித்தனர்.