tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்து இயக்கம்

தருமபுரி, ஜூலை 30- மத்திய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் கையெ ழுத்து இயக்கங்கள் நடைபெற்றன. மத்திய பாஜக அரசு உருவாக்கி யுள்ள தேசிய கல்வி கொள்கை வரைவு கல்லாமையை அதிகமாக உருவாக் கும். 3,5,8 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு பொதுத் தேர்வு என்பது மாணவர்களின் கல்விச் சுமையை அதிகமாக்கும். எனவே, இந்த கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். கல்வியை முழுவதுமாக மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ கம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் நகரப் பகுதி யில் பத்துக்கும் மேற்பட்ட இடங்க ளில் கையெழுத்து மற்றும் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றன. இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் எஸ். வெள்ளியங்கிரி தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் விளக்க உரையாற்றி னார். மாவட்ட குழு உறுப்பினர் பி.எம். முருகேசன் மற்றும் நகர குழு உறுப் பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்  ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெருப்பூர் தின்னபெல்லூர் ஏரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு முனைக் கூட்டங்கள் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செய லாளர்  முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஸ் வநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்.பி.இளங்கோவன் உள் ளிட்டோர் விளக்க உரையாற்றினர்.  பென்னாகரம் பகுதி குழுவின் சார்பில் மடம் கிராமம்,  ஜக்கம்பட்டி, மல்லாபுரம்,  கரியாம்பட்டி உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றன. இக் கூட்டங்களுக்கு பகுதி பொறுப்பு செய லாளர் கே.அன்பு தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.மாதன், மாவட்ட குழு உறுப் பினர்கள் வி.ரவி, எம். சிவா, முனிராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாப்பாரப்பட்டி பகுதி குழுவின் சார் பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத் திற்கு பகுதி குழு செயலாளர் ஆர். சின்ன சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ .குமார், மாவட்ட செயற் குழு உறுப்பினர் சோலை அர்ஜு னன், விஸ்வநாதன் மற்றும் பகுதிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்
நாமக்கல் வெப்படை பேருந்து நிறுத்தம் அருகில் மாவட்ட குழு உறுப்பினர் எஸ். தனபால் தலைமை யில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.